Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐ படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி!

29 ஆக, 2014 - 14:32 IST
எழுத்தின் அளவு:

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஷங்கரின் ஐ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்தினின் தம்பியும், அப்படத்தை இணைந்து தயாரித்து வரும் ரமேஷ் பாபு சமீபத்தில் அமெரிக்கா சென்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அர்னால்டின் வீட்டிற்குச் சென்று ஐ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அவரை முறைப்படி நேரில் அழைத்தார். ரமேஷ் பாபுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஐ பட விழாவில் கலந்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார் அர்னால்டு.


ஐ படம் பற்றியும் சிலாகித்துப் பேசிய அர்னால்டு, ஹாலிவுட் தரத்திற்கு இணையாக ஐ படம் உருவாகி வருவதாக தான் கேள்விப்பட்டதாகவும், குறிப்பாக ஹீரோ விக்ரம் இப்படத்திற்காக 120 கிலோ, 70 கிலோ, 50 கிலோ என தன்னை உருமாற்றி நடித்திருப்பதைப் பற்றியும் வியந்து பேசினாராம். அர்னால்டின் வருகையை உறுதி செய்யும் விதமாக ரமேஷ் பாபு அமெரிக்காவில் அர்னால்டுடன் எடுத்துக் கொண்ட புடைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதோடு, ஆஸ்கார் ஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.


ஐ படத்தின் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இன்னொரு ஹாலிவுட் பிரபலமான ஜாக்கிசான் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். அர்னால்டு, ஜாக்கிசான் வருகையைத் தொடர்ந்து ஐ படத்தைப் பற்றி எதிர்பார்ப்பு எகிறி வரும் அதே நேரத்தில் இன்னொரு முணுமுணுப்பும் கேட்கிறது படத்துறையில்.


இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஐ படத்தில் பணியாற்றிய பல தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். தங்களின் சம்பளத்தைக் கேட்டு வருடக்கணக்கில் ஆஸ்கார் பிலிம்ஸுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அவர்களின் சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள், அர்னால்டு, ஜாக்கிசான் இருவருக்கும் தலா கோடிகளை கொடுத்து இசைவெளியீட்டு விழாவுக்கு கூட்டி வருகிறார்களே நியாயமா இது? என்பதே தொழிலாளர்களின் முணுமுணுப்பு.


நியாயமான கேள்விதானே இது?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in