மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தற்போது பி.கே. படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் பிஸியாக இருந்த அமீர்கான், டி.வி. ரியாலிட்டி ஷோவான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மக்கள் பிரச்னையை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தநிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனை தொட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அமீர்கான்.
இந்நிலையில், சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து பேச வைக்க எண்ணியுள்ளார் அமீர்கான். பிரபல பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத், ப்ரனீதி சோப்ரா ஆகியோர் பங்கேற்று இந்த நிகழ்ச்சியில் பேச உள்ளனர். பெண்களுக்கான அதிகாரம் தொடர்பாக இவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் டாப் ஸ்டார்களை அழைத்து பேச வைக்க எண்ணியுள்ளனர். அப்படி பங்கேற்கும் பிரபலங்கள் தங்களது சினிமா பற்றி எதுவும் பேசமாட்டார்கள், முழுக்க முழுக்க சமூகம் தொடர்பான பிரச்னைகளை பற்றி பேசுவார்கள் என கூறப்படுகிறது. சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு அடுத்த மாதம் முதல் ஒளிப்பரப்பாகிறது.