ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோபிகா இன்டர்நேஷனல் சார்பில் உருவாகி வரும் முதல் படம் விருந்தாளி. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை விருந்தாளிகளைப் போல... என்ற கருத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் நாயகனாக புதுமுகம் ஈஸ்வர் நடிக்கிறார். நாயகியாக அவள் பெயர் தமிழரசி படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்த தியானா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பாலாசிங், சேரன்ராஜ், சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் டைரக்டர் வாட்டர்மேன், உதயசங்கரன் என்ற பெயரில் ஏற்கனவே மலையாள ஆல்பம் உலகில் முன்னணியில் திகழ்ந்தவர். எனவே வருஷம் 16, பூவிழி வாசலிலே, பிரண்ட்ஸ் போன்ற மலையாள இயக்குனர்கள் இயக்கிய ஹிட் படங்கள் வரிசையில் கண்டிப்பாக விருந்தாளியும் இடம் பெறும் என்கிறது கோடம்பாக்கத்து சென்டிமென்ட் கணிப்பு.
படத்திற்கு விருந்தாளி என்று பெயரிட்டிருப்பதால் விருந்தோம்பல் மூலம் விளம்பரம் தேட முனைந்து வருகிறது விருந்தாளி டீம். இதற்காக தமிழகத்தின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் இருந்து வருகிற ஜூன் 15ம்தேதி முதல் சிறப்பு பிரமோஷனை தொடங்கப் போகிறார்களாம். விருந்தாளி படம் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இதுவரை தமிழில் எத்தனையோ கிராமத்து காதல் கதைகள் வந்திருந்தாலும், அதிலிருந்து இப்படம் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார் டைரக்டர் வாட்டர்மேன். படம் முழுவதும் தென்காசியில் படமாக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.