ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமானவர் ஷிவதா. தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷிவதாவைத் தேடி வந்த தெலுங்கு வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை படத்துக்காக ஒரு வருடம் சிரமப்பட்டேன். அதற்கான பலன் கிடைத்தது. நெடுஞ்சாலை ஷிவதா என்றே என்னை அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த படம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடித்து வரும் ஜீரோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் கடவுள் பக்தி மிகுந்த, கலாச்சாரத்தை நேசிக்கிற மார்டன் மனைவியாக நடிக்கிறேன். அஸ்வின் ஹீரோ. பரத்பாலா சார் உதவியாளர் அருண் குமார் இயக்குகிறார். 70 சதசவிகித படப்பிடிப்புகள் முடிந்துவிட்டுது. காமெடி கலந்த ஹாரர் மூவி.
இதுதவிர இரண்டு தமிழ் படங்களிலும் ஒரு மலையாளப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தெலுங்கு வாய்ப்பு வந்தது. தெலுங்கு தெரியாததால் நடிக்கவில்லை. தெரிந்த மொழிகளில் நடிப்பது, நடிக்கிற படத்துக்கு நானே டப்பிங் பேசுவது என்று முடிவு செய்திருக்கிறேன். எனது தாய்மொழி மலையாளம்தான். ஆனால் நான் பிறந்தது திருச்சியில், படித்தது சென்னையில் அதனால் எனக்கு மலையாளமும், தமிழும் சரளமாக பேச வரும். நெடுஞ்சாலையில் நான்தான் டப்பிங் பேசினேன். இனி வரும் படங்களிலும் நான்தான் பேசுவேன். என்கிறார் ஷிவதா.