பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேள்வி, விஜயநகரம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஹாசினி. பட வாய்ப்புகள் குறைந்ததால் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது தனது பெயரை சாரிகா என்று மாற்றிக் கொண்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். கதம் கதம் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இப்போது மீண்டும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நிராயுதம் படத்தில் சாரிகாதான் ஹீரோயின். காதல் செய்ய விரும்பு, ரங்கா, மிட்டாய் படங்களில் நடித்த சந்தோஷ் ஹீரோ. எம்.பி.ராஜதுரை என்ற புதுமுகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் தரும் முன்னோட்டம் இது... " அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் ஹீரோவுக்கு தமிழ் கலாச்சாரத்தின் மீது ஆர்வம். சென்னையில் கால்செண்டரில் வேலை பார்க்கும் ஹீரோயினுக்கு அமெரிக்க கலாச்சாரத்தின் மீது ஆர்வம். இருவரையும் ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறான். தனிமையில் இருக்கும் அவர்கள் இருவரும் ஒருவர் கலாச்சார ஆர்வத்தை இன்னொருவர் மீது திணிக்கப் பார்க்கிறார்கள் இறுதியில் யார் வென்றார்கள் என்பதும், வில்லன் யார், எதற்காக கடத்தினான் என்பதும் படத்தின் திரைக்கதை.
ஹீரோயின் தேர்வு நடத்தியபோது படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது என்ற நிபந்தனை வைத்தோம் அதை ஏற்றுக் கொண்டதால் ஹாசினியை நடிக்க வைக்கிறோம். இந்தப் படம் அவருக்கு நல்ல ரீஎண்ட்ரியை கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ராஜதுரை.