ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது எந்த மீடியாக்களை திறந்தாலும், ஐஸ் பக்கெட் போட்டியைப் பற்றிய சுவராஸ்யமான விசயங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, நடிகர் நடிகைகளே இந்த போட்டியில ஆர்வம் காட்டி வருவதால், குறுகிய காலத்தில் பெரிய அளவில் ரீச்சாகி விட்டது. அதனால் அதைப்பார்த்து இப்போது பர்மா படக்குழுவினர், நேற்று அப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தபோது, ஒருவருக்கு ரைஸ் பக்கெட்டை கொடுத்து புதுமையான முறையில் பப்ளிசிட்டி செய்தனர்.
அதுபற்றி அவர்கள் கூறுகையில், ஐஸ் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து அதை தலையில் ஊற்றிக்கொள்வது ஒரு விளையாட்டு. அது வித்தியாசமாக தெரிந்ததால் நடிகைகள் பலர் நான் நீயென்று போட்டி போட்டு அதில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால், நாங்கள் ரைஸ் பக்கெட் கொடுக்கிறோம். இதை அதற்கு போட்டியாக எடுத்துக்கொள்ள முடியாது.
அந்த ஐஸ் பக்கெட்தான் இதற்கு ரோல்மாடல். அதோடு ஒரு ஏழைக்கு இந்த ரைஸை கொடுப்பதால் அவர்கள் ஓரிரு நாட்கள் இதை சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில், இப்படி ஒருவருக்கு கொடுப்பது எங்கள் யூனிட்டுக்கு ஒரு மகிழ்ச்சியை தருகிறது என்றனர். மேலும், ஒரு நபரை அழைத்து, படத்தின் நாயகியான ரேஷ்மிமேனன், தயாரிப்பாளரின் அம்மா ராணி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும இணைந்து அந்த ரைஸ் பக்கெட்டை அந்த நபருக்கு விழா மேடையிலேயே அளித்தனர்.