அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அதையடுத்து காட்டுமல்லி, நகர்புறம் என்ற படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆனால் அந்த படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை. அதையடுத்து, ஜி.வி.பிரகாசுடன் பென்சில், விஷ்ணுவுடன் ஜீவா, சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை, அதர்வாவுடன் ஈட்டி, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்காரதுரை என 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரேயொரு படம் மட்டுமே திரைக்கு வந்த நிலையில், 7 படங்களில் நடித்து வரும் ஸ்ரீதிவ்யாவை அடுத்தடுத்தும் கால்சீட் கேட்டு சில கம்பெனிகள் துரத்துகின்றன. ஆனால், அவர், நான் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வருகின்றன. அந்த படங்களுக்கும், எனது நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கப்போகிறது என்பது படம் வந்தால்தான் தெரியும். அதனால் படங்களின் ரிலீசை எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறி விட்டாராம்.
இதற்கு முக்கிய காரணம், இனி அடுத்த ரவுண்டில் இன்னும் பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. அதனால் இந்த நேரத்தில் சிறிய படங்களில் கமிட்டாகி விட்டால் அதன்பிறகு அந்த படங்களில் இருந்து வெளியேற முடியாது என்பதால்தான் யாரிடமும் அட்வான்ஸ் வாங்காமல் டேக்கா கொடுத்து வருகிறாராம்.
அதுமட்டுமின்றி, அவர் நடித்திருப்பதில் ஜீவா, ஈட்டி, பென்சில், காக்கி சட்டை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருவதால், அதன்பிறகு ஸ்ரீதிவ்யாவும் கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்தும் அதிரடி திட்டமும் தீட்டிக்கொண்டிருக்கிறாராம்.