'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தமிழ், தெலுங்குத் திரையுலகில் ஒரு ஹீரோயினாக 12 வருடங்களுக்கும் மேல் இருந்து வருபவர் த்ரிஷா. இந்தியில் கூட சில வருடங்களுக்கு முன் நடித்து விட்டார். ஆனால், பக்கத்தில் இருக்கும் கன்னடத்தில் நடிக்காமலே இருந்தார். அதையும் தற்போது நிறைவேற்றி விட்டார். கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகும் 'பவர்' திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள த்ரிஷா கன்னடத்தில் சரியான அறிமுகத்திற்காக காத்திருந்ததாகச் சொல்கிறார்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய த்ரிஷா, “தமிழிலும், தெலுங்கிலும் என்னுடைய அறிமுகப் படங்கள் எனக்கு சரியாக அமைந்தன. அதே போல்தான் கன்னடத்திலும் அறிமுகமாக வேண்டும் என்று இருந்தேன். 'பவர்' படம் எனக்கு சரியான அறிமுகமாக அமைந்துள்ளது. எந்த மொழியிலும் அறிமுகம் என்பது கமர்ஷியலாகவும், நல்ல கதையுடனும் அமைய வேண்டும். அது எனக்கு இந்தப் படத்தில் கிடைத்துள்ளது.
கன்னடத்தில் நான் வேண்டுமென்றே தாமதமாக அறிமுகமாகவில்லை. இப்படத்தின் இசை வெளியீட்டுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் என்று இருந்தேன். ஆனால், வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் தெலுங்கு ஒரிஜனலான 'தூக்குடு' படத்தைப் பார்த்தேன்.
அஜீத்துடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆக்ஷன் படங்களிலும், சரித்திரப் படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை வெறும் 20 சதவீதம்தான் அப்படி நடித்துள்ளேன். இன்னும் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் எவ்வளவோ உள்ளன.
கன்னடத்தில் நடிப்பது எனக்கு கடினமாக இல்லை. செட்டில் பலரும் தமிழ் பேசுவதால் எனக்கும் ஈஸியாகவே உள்ளது. பெங்களூரு எனக்கு இரண்டாவது தாய்வீடு போலத்தான். சென்னையிலிருந்து நான்கு மணி நேரங்களுக்குள் வந்துவிடலாம், ” என்றார் த்ரிஷா.
த்ரிஷா புயல் இனி கர்நாடகாவைக் கடக்குமா என பார்ப்போம்...!!