ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள இளம் நடிகர்களில் முக்கியமானவர் மகேஷ் பாபு. எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். திரையுலகத்தையும் தாண்டி பழகுவதற்கு இனிமையானவர் என்று சொல்லப்படுபவர். ஆனால், அவருக்கும் படத்தில் அவர் ஜோடியாக நடிப்பவர்களுக்கும் அவ்வளவாக ராசியில்லை என்று சொல்லப்படுகிறது. சில சமயங்களில் வேறு ஏதாவது பிரச்னையாலும் அவருக்கும் நடிகைகளுக்கும் சண்டை வந்து விடுகிறது.
சில மாதங்களுக்கு முன் அவருடைய பட போஸ்டரைப் பற்றி சமந்தா ஒரு கமெண்ட் அடிக்கப் போக அதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கும், சமந்தாவிற்கும் சமூக வலைத்தளங்களில் சரியான சண்டை நடைபெற்றது. சமீபத்தில்தான் ஒரு விருது வழங்கும் விழாவில் மகேஷ் பாபுவும், சமந்தாவும் ராசியானார்கள். தற்போது மகேஷ் பாபுவுடன் 'ஆகாடு' என்ற படத்தில் தமன்னா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது இருவரும் பேசிக் கொள்வதேயில்லையாம். மகேஷ் பாபு, தமன்னா இருவருமே ஜோவியலாகப் பேசக் கூடியவர்கள்தான். ஆனால், இருவருக்குமிடையே என்ன நடந்ததென்று தெரியவில்லையாம், இருவரும் படத்தின் சீனைப் பற்றிக் கூட விவாதித்துக் கொள்வதில்லையாம்.
ஷாட்ரெடி என்று இயக்குனர் சொன்னதும் ரெடி என தமன்னா வந்து நிற்கிறாராம். அதன் பின் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து முடித்ததும் தமன்னா நேராக கேரவன் சென்று விடுவாராம். இருவருக்குள்ளும் அப்படி என்ன சண்டை நடந்தது என படக்குழுவினர் அலசி ஆராய்ந்து வருகிறார்களாம். ஒரு வேளை படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாமடியது தமன்னாவுக்கு வருத்தமோ என்னமோ....?