பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தெலுங்குத் திரையுலகில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருவது ஒரே ஒரு தயாரிப்பாளரைப் பற்றித்தான், அவர் பெல்லம் கொண்டா சீனிவாஸ். அவருடைய மகனை வைத்து 'அல்லுடு சீனு' என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே அவர் சுமார் 50 கோடி செலவு செய்தார். மகனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார் என வேறு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே மகனை வைத்து அடுத்து இவர் தயாரிக்கப் போகும் படத்தில் அவர் மகன் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் ஜோடியாக நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். முதலில் இந்தப் படத்தில் மகன் ஜோடியாக ஸ்ருதிஹாசனைத்தான் நடிக்க வைக்கலாம் என்று இருந்தார்களாம். ஆனால், 'அல்லுடு சீனு' படத்தில் சாய் சீனிவாசுடன் தமன்ன ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அப்போது இருவருக்குமிடையே நல்ல பழக்கம் ஏற்பட்டதாம். அதனடிப்படையில் அடுத்த படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கலாம் என மகன் அப்பாவிடம் கேட்டாராம். மகனின் ஆசை அப்பாவும் நிறைவேற்றி தமன்னாவையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இப்படத்தை பொயப்பட்டி சீனு இயக்க உள்ளார்.
மகன் ஆசையை அப்பா நிறைவேற்றி வைத்ததைப் பற்றித்தான் தற்போது தெலுங்குத் திரையுலகில் சுவாரசியமாகப் பேசிக் கொள்கிறார்களாம்.