டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அலிபாபா, கழுகு, வல்லினம் படங்களை அடுத்து கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே படம் அவருக்கு இரண்டாவது ஹிட்டாக அமைந்தது. அதனால் இப்போது வானவராயன் வல்லவராயன், யாட்சன், வன்மம், விழித்திரு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் பல படங்களில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகத்தான் நடிக்கிறார்.
இந்த நிலையில், யாட்சன் படத்தில் ஆர்யா, வன்மம் படத்தில் விஜயசேதுபதிக்கு தன்னை விட முக்கியத்துவம் கொடுத்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த கிருஷ்ணா, வானவராயன் வல்லவராயன் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ள விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்துக்கு தனக்கு இணையான வேடம் கொடுத்திருப்பதால் அதிருப்தியில் இருக்கிறாராம்.
முக்கியமாக, அவர் காமெடியாக கலாய்ப்பதிலும் வல்லவர் என்பதால் பல காட்சிகளில் கிருஷ்ணாவை விட கைதட்டல் வாங்கும் அளவுக்கு நடித்திருக்கிறாராம். கிட்டத்தட்ட அடுத்த சிவகார்த்திகேயன் போல் தனது என்ட்ரி அமையவேண்டும் என்று ரிஸ்க் எடுத்திருககிறாராம் மா.கா.பா. இதனால் கிருஷ்ணாவை விட மா.கா.பாவின் காட்சிகளே படத்தில் களை கட்டுகிறதாம்.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள கிருஷ்ணா, நான்தான் சீனியர், ஆனால் அவருக்கும் எனக்கு இணையான ரோல் கொடுக்கப்பட்டிருப்பதால் என்னைவிட அவருக்கே கதையில் முக்கியத்துவம இருப்பது போல தெரிகிறது என்று அவரது சில காட்சிகளுக்கு கத்தரி வைக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம். இதனால் இரண்டு கதாநாயகி நடிக்கும் படங்களில் ஏற்படும் ஈகோ பிரச்சினை இந்த படத்திலும் ஏற்பட்டுள்ளதாம்.