Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மத்திய அமைச்சர் மகனை திருமணம் செய்ததாக நடிகை பரபரப்பு - திருமண நிச்சயநாளில் புகார்

28 ஆக, 2014 - 10:21 IST
எழுத்தின் அளவு:

மத்திய அமைச்சரின் மகன், ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக, பிரபல நடிகை பரபரப்பு புகார் கூறியுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன், கார்த்திக் கவுடாவுக்கும், ஸ்வாதி என்ற பெண்ணுக்கும், மடிகேரி குஷால் நகரில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. இது நடந்த, ஒரு மணி நேரத்தில், பிரபல கன்னட நடிகை மைத்ரி, பெங்களூருவில் கன்னட, டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.


பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன், கார்த்திக் கவுடாவும், நானும் காதலித்து வந்தோம். கடந்த ஜூன், 5ம் தேதி அவரது மங்களூரு வீட்டில், என்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இது, சில நண்பர்களுக்கு தெரியும். இதை வெளியில் சொல்ல வேண்டாம்; பெற்றோரை சமாதானப்படுத்திய பின், பகிரங்கமாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று, கார்த்திக் சத்தியம் செய்திருந்தார். அவர் மீது கொண்டிருந்த காதலால், அவர் சொன்னதை அப்படியே ஏற்று கொண்டு அமைதியாக இருந்தேன். தினமும் போனில் பேசுவார். அவரது தாயிடமும் பேச சொல்வார். அவரது தாய், வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கூறினார். கடந்த ஒரு மாதமாக, கார்த்திக் என்னிடம் பேசாமல் தவிர்த்தார். போலீசில் புகார் கொடுக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. போட்டோ மட்டும் தான் உள்ளது. இவ்வாறு கூறிய அவர், கார்த்திக்குடன் நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டார்.


நடிகை குற்றம் சாட்டியுள்ள, கார்த்திக் கவுடா, இது குறித்து கூறியதாவது: மைத்ரி சொல்வது அத்தனையும் கட்டு கதை. நான் அவரை காதலிக்கவும் இல்லை. திருமணம் செய்து கொள்ளவும் இல்லை. அவர் காட்டும் போட்டோ உண்மையானது அல்ல. என் தந்தை பெரிய பதவியில் உள்ளார். அவருக்குள்ள மரியாதையை நான் கெடுப்பேனா? அவர் பெயரை கெடுக்க செய்யும் சதி இது. நான் அலுவலகம், வீடு என்று இருக்கிறேன். மைத்ரி கூறியுள்ள புகார், வேதனையாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியதாவது: லோக்சபா தேர்தலில், என் மனைவியும், மகனும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு முன், அவர்கள் அரசியலுக்கு வந்தது இல்லை. நான் சம்பிரதாயத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவன். கலாசாரத்தை மதிப்பவன். நான் எம்.பி.யாக இருந்த போதும், முதல்வராக இருந்த போதும், எம்.எல்.ஏ.வாக, இருந்த போதும், பொது வாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும் எதையும் மறைத்ததில்லை. அது ஒரு திறந்த புத்தகம். என் மகனுக்கு திருமணம் செய்ய, கடந்த, இரண்டு மாதங்களாக பெண் பார்த்து கொண்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். பிறகு என் மனைவியின் தாய் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஸ்வாதியை, என் மகனுக்கு நிச்சயம் செய்தோம். என் மகன் மைத்ரியை திருமணம் செய்து கொண்டிருந்தால், இது குறித்து மைத்ரி என்னை சந்தித்து பேசியிருக்கலாம். என் வீட்டில் உள்ளவர்கள் எதையும் என்னிடம் மறைத்ததில்லை. இது என் குடும்பத்தின் மீது, அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலரால் செய்யப்படுவும் சதி என்று எண்ணுகிறேன். இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.


நடிகை மைத்ரியின் தாய் இந்திரா கூறியதாவது: என் மகளுக்கும், கார்த்திக்குக்கும் திருமணம் நடந்தது உண்மை. இது எனக்கு தாமதமாக தெரிய வந்தது. இதில் எனக்கு விருப்பமில்லை. அரசியல் வாதிகள் சகவாசம் வேண்டாம் என்று மகளிடம் கூறினேன். அவர் செல்வாக்குள்ள அரசியல்வாதி, எதை வேண்டுமானாலும் செய்வார் என்று கூறினேன். கார்த்திக் நல்லவர்; அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்துள்ளார் என்று என் மகள் கூறினார். நிறைய விஷயங்களை, என் மகள் என்னிடம் மறைத்து விட்டார். நான் கார்த்திக்கிடம் பேசியதில்லை. இவ்வாறு, இந்திரா கூறினார். நடிகையின் பேட்டி, கர்நாடகா அரசியலில், பெரும் புயலை கிளப்பி உள்ளது.


யார் இந்த மைத்ரி? : மைத்ரி, கர்நாடகா மாநிலம் நாகமங்களாவை சேர்ந்தவர். அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்து விஜய நகரில் தங்கி, சினிமாவில் நடித்து வந்தார். இவர் நடித்த முதல் படம் சூர்யா தி கிரேட். மவுரியா என்ற படத்தில் சிவராஜ் குமார் தங்கையாக நடித்துள்ளார். வேறு சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த, 2011 மே, 20 ம் தேதி விஜயநகர் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் இவரது சகோதரிகள், ரேகா, ரூபா ஆகியோருடன் சென்று கொண்டிருந்த போது, சிக்னலை ஜம்ப் செய்தார். போக்குவரத்து போலீஸ்காரர் சிவகுமார், காரை நிறுத்த கூறினார். அவர் மீது கோபம் கொண்ட மைத்ரி, அவரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, இவர் மீது, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், இவரை இரண்டு நாள் சிறையிலடைத்தனர். பின், நடிகர் அம்பரீஷ் தலையிட்டு சமாதானம் செய்து அவரை விடுவித்தார். காங்கிரசை சேர்ந்த இவர், பா.ஜ., பிரமுகர் மகன் கார்த்திக்கை காதலித்ததாக கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in