'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு பிரசார பிரிவின் தூதராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இன்டர்போல் அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாருக்கான், உண்மையில் இது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கவுரவம். இந்த பொறுப்பை நல்லபடியாக செய்ய முடியும் என நம்புகிறேன். மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை ஒழிக்க நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மனித இனத்திற்கு எதிரான குற்றத்தை வேரறுக்க நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய உறுதி ஏற்க வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரக் குழு தூதராக நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இந்த அமைப்பின் தூதராக நடிகர் ஜாக்கி சான், கால்பந்து வீரர் லியோநெல் மெஸ்சி, பார்முலா ஒன் கார் பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சோ மற்றும் கிமி ரெய்க்கோன்னன் ஆகியோர் உள்ளனர்.
போதை பொருள் கடத்தல், போதை பொருள் விற்பனை, சைபர் கிரைம், ஆள்கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், விளையாட்டு துறையில் ஊழல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானை பிரச்சாரக்குழு தூதராக இன்டர்போலின் தலைமையகமான லியோனில் இருந்து அறிவித்த இன்டர்போல் அமைப்பின் பொதுச் செயலாளர் ரொனால்ட் கே நொபெல் கூறுகையில், ஷாருக்கான் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். பல படங்களில் நடித்து, மக்களை மகிழ்வித்து சினிமா துறைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.கலைத்துறையில் புகழின் உச்சியில் இருக்கும் அவர் இது போன்ற பிரச்சாரத்திற்கு தலைமை ஏற்பது பலரிடமும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.