டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2005ம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான தமன்னா இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 37 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தெலுங்கில் மட்டும் 18 படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அங்கு வெற்றி பெற்றிருப்பதால், தமன்னா நடித்தால் ஹிட் என்கிற செண்டிமென்ட்டும் உள்ளதாம்.
அதனால், அப்படி தமன்னா நடிக்கும் படங்களுக்கு சிலர் பணமாக கொடுக்காமல் அசையா சொத்துக்களையும் அள்ளிக் கொடுக்கிறார்களாம். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தமன்னாவுக்கு சொகுசு பங்களா ஒன்றை கட்டிக்கொடுத்தனர். அதனால் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்கும்போது அந்த வீட்டில்தான் தங்குகிறார் தமன்னா.
அதையடுத்து, இப்போது தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தனது மகன் பெல்லம் கொண்ட சீனிவாஸை வைத்து தயாரிக்கும் படத்திற்கு தமன்னாவை புக் பண்ணியபோது, ஒரு கோடி ரவுண்டாக வேண்டும் என்று சம்பளம் கேட்டாராம். ஆனால் அதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வீடு தருவதாக தமன்னாவிடம் பட அதிபர் சொல்லவே, டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம்.
காரணம் இப்போதெல்லாம் பணமாக வாங்கினால் நிறைய பிரச்சினை இருக்கிறது என்பதோடு, வீடாக வாங்கினால் இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு அதன் மதிப்பு டபுளாகி விடும் என்பதால் இப்போது இந்த மாதிரி அசையா சொத்துக்களை சம்பளமாக தருவதை வரவேற்கிறாராம் தமன்னா.