ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர், அடுத்து அமரகாவியம் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்க, ஆர்யாவே இப்படத்தை தனது தம்பிக்காக பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து நடிகை நயன்தாராவே கண் கலங்கினார். அந்தளவுக்கு படத்தின் கதைக்களம் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என்று இப்போதே அனைவரும் நம்புகின்றனர்.
இந்நிலையில், அமரகாவியம் படத்திற்கு பிறகு மீண்டும் ஜீவா சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் ஆர்யா. இதனை இயக்குநர் ஜீவா சங்கரும் உறுதி செய்திருக்கிறார். இதில் யார் நடிப்பார்கள் என என்னால் இப்போது உறுதி சொல்ல முடியாது. ஆர்யாவா அல்லது அவரது தம்பி சத்யாவா என்பதை கதை தான் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.