பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களை இயக்கிய கண்ணன், தற்போது ஒரு ஊர்ல இரண்டு ராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. விழாவில் படத்தின் ஆடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட இயக்குநர் விக்ரமன் பெற்றுக்கொண்டார். ஆடியோ விழாவில் நடந்த நிகழ்வுகள் எல்லாமே ஒரு கலாட்டாவாகவே இருந்தது. அது பற்றிய செய்தி இதோ...
சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து
காமெடி நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள். முதலில் எல்லோரும் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் சூரி பேசுகையில், என்னை எல்லோருக்கும் அடையாளம் காட்டியது சுசீந்திரன் இயக்கி வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு தான். ஆகையால் அந்த படம் ரிலீஸான நாள் தான் எனக்கு பிறந்தநாள் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், ஈகோ இல்லாத நடிகர் விமல், இந்தப்படத்தில் ராஜாவின் பாதி பதவியை எனக்கு கொடுத்து விட்டார். அவருக்கு நன்றி, என்னை திரையுலகிற்கு அடையாளம் காட்டிய சுசீந்திரன் மற்றும் இதர இயக்குநர்கள், உடன் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
இமானை புச்சி என்று கொஞ்சிய ப்ரியா ஆனந்த்...!
ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த மாதிரி தெரியவில்லை, ஒரே கலாட்டா நிகழ்ச்சி போன்று இருந்தது. ஆடியோ விழாவின் ஹைலைட்டே ப்ரியா ஆனந்த் தான். விழாவில் பேசிய அவர், எனக்கு இமானை ரொம்ப பிடிக்கும், அவரது கன்னத்தை பிடித்து கொஞ்ச வேண்டும் என எனக்கு ரொம்ப நாளாக ஆசை என்று கூறியவர், மேடையிலேயே இமானின் கன்னத்தை பிடித்து என் புச்சி என்று கொஞ்சி மகிழ்ந்தார். ஒருநிமிடம் இமானே இன்ப அதிர்ச்சியாகிவிட்டார்.
ஜொள் விட்ட நடிகர்கள்...
ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் ப்ரியா ஆனந்த் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் கவர்ச்சி காண்பித்து நடித்துள்ளார். அதிலும் ஒருபாட்டில் அனைவரையும் கிறங்க வைக்கும் அளவுக்கு நடித்துள்ளார். அந்தப்பாடலில் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சியை பார்த்த விழாவுக்கு வந்திருந்த சிங்கமுத்து உள்ளிட்ட பல சீனியர் நடிகர்கள் ஜொள் விடாத குறையாக அவரது நடிப்பையும், கவர்ச்சியையும் ஏகமாக புகழ்ந்தனர். அதோடு இவர்கள், சூரிக்கு நடன சூறாவளி என்ற பட்டமும் கொடுத்தனர்.
காமெடியன்களை தான் ஹீரோயின்களுக்கு பிடிக்கிறது - சிவகார்த்திகேயன்
பொதுவாக எல்லோரும் ஹீரோ - ஹீரோயின் கெமிஸ்ட்ரி தான் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள், ஆனால் காமெடி நடிகர்கள் உடன் தான் ஹீரோயின்கள் அதிக நெருக்கமாக பழகுகின்றனர். என்னுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, ப்ரியா ஆனந்த் போன்றோருக்கு சூரியை தான் அதிகம் பிடிக்கிறது. அவர் சொல்றதை அப்படியே நம்புறாங்க என்று சூரியை கலாய்த்தார்,சிவகார்த்திகேயன்.
ஹீரோவை இழுத்து ஓடிய ப்ரியா ஆனந்த் - விமல்
விமல் பேசுகையில், இப்போது மேடையில் பார்த்திருப்பீர்கள் ப்ரியா ஆனந்த் எவ்வளவு சேட்டை செய்தார் என்று, விழா மேடையிலேயே இப்படி என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களை என்ன பாடு படுத்தியிருப்பார் பாருங்கள். ஷூட்டிங்கின் போது ஒருநாள் நான், ப்ரியா ஆனந்த்தை இழுத்து கொண்டு ஓட வேண்டும், ஆனால் அவர் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார் என்றார்.
இப்படியாக விழாவில் பங்கேற்று பேசியவர்கள் அனைவரும் ஒரே கலகலப்பாக பேசி ஆடியோ விழாவை கலகலப்பு விழாவாக்கினர்.
ஆடியோ விழாவில், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், ஸ்ரீகாந்த், விஷ்ணு, தயாரிப்பாளர் மதன், பாடலாசிரியர் யுகபாரதி, ரவி மரியா, யுடிவி தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.