கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
வத்திக்குச்சி, ரகளபுரம் படங்களில் நடித்திருப்பவர் அங்கனாராய், சமீபத்தில் வெளிவந்த மேகா படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அங்கனாராய் பெங்காலி படங்களில் நடிக்க இருக்கிறார் இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் பெங்காலி பெண்ணாக இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுவதால் எனக்கு தமிழ் வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. மகாபலிபுரம், பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் துனியா விஜய்யுடனும், மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கத்திலும் நடித்து வருகிறேன். தற்போது எனது சொந்த மொழியான பெங்காலியிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஹீரோயினை மையப்படுத்திய கதை. பெங்காலியில் அதிகமாக கமர்ஷியல் படங்கள் கிடையாது. அங்கு மலையாளம் போன்று கதைக்கு முக்கியத்துவமான படங்கள்தான் வரும். அப்படியொரு படத்தில் நடிக்கிறேன்.
கபடம் படத்தின் கதைப்படி கவர்ச்சி தேவைப்பட்டதால் கவர்ச்சியாக நடித்தேன். மேகா படத்தில் சிறிய கேரக்டராக இருந்தாலும் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டராக இருந்ததால் நடித்தேன். காமெடியிலும் திறமை காட்ட வேண்டும் என்பதற்காக ரகளபுரம் படத்தில் நடித்தேன்.
இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தால் வாய்ப்புகள் வராது. வருகிற வாய்ப்புகளில் நல்லவற்றை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திக்கிறேன். பெங்காலி படத்தில் நடித்தாலும் தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்துவேன்" என்கிறார் அங்கனாராய்.