பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
ஒருவர் என்னதான் அழகாக இருந்தாலும் அவரது முதல் படத்தில் எப்படி நடிக்கிறாரோ அப்படித்தான் அவர் சினிமா வாழ்க்கை தொடரும் என்பார்கள். ஒருசிலர் வேண்டுமானால் இந்த பார்முலாவிலிருந்து தப்பிக்கலாம். அப்படி தப்ப முடியாமல் போனவர் சஞ்சனா சிங். ஒரு ஹீரோயினுக்கான எல்லா அம்சங்கள் இருந்தும் இன்று வரை ஹீரோயினாக முடியாமல் கவர்ச்சி வேடம், சிறப்பு தோற்றம் என்றுதான் நடித்து வருகிறார். காரணம் அவர் முதலில் நடித்த ரேணிகுண்டா படம். அதில் நாயகியின் அக்காவாக, ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். அது அஞ்சான் வரை தொடர்கிறது.
ஒரு சின்ன பிளாஷ் பேக்... ரேணிகுண்டா படத்திற்கு ஹீரோயின் தேடுகிறார்கள். அதன் ஆடிசனுக்கு நிறைய பெண்கள் வருகிறார்கள். அப்போது மும்பை மாடலாக இருந்து, சினிமா வாய்ப்பு கேட்டு அந்த ஆடிசனுக்கு வருகிறார் சஞ்சனா சிங். அந்தப் படத்தில் அப்பாவியான முகம் கொண்ட பிளஸ் 2 படிக்கிற ரேன்ஞ்சில் இருக்கிற ஒரு ஹீரோயின்தான் தேவை. ஆனால் சஞ்சனா ஆறடி உயரத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து வருகிறார். இயக்குனர் பன்னீர் செல்வம் அவரை பார்த்து மிரண்டு. "இந்த படத்திற்கு நீங்க சூட் ஆகமாட்டீங்க. ஆனா படத்தில் இன்னொரு கேரக்டர் இருக்கு நடிக்கிறீங்களா?" என்கிறார். எப்படியாவது சினிமாவில் நடித்தால் போதும் என்றிருந்த சஞ்சனா இதற்கு ஒப்புக் கொள்கிறார்.
அன்றைக்கு வேண்டாம் என்று சொல்லி மேலும் முயற்சி செய்து அடுத்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தால் இன்றைக்கு சஞ்சனா சிங்கின் உயரம் வேறு. அவர் அன்று ரேணிகுண்டாவில் பாலியல் தொழிலாளியாக நடித்தார். அந்த கேரக்டரும் பேசப்பட்டு விட்டதால் அந்த இமேஜில் இருந்து அவரால் மீளவே முடியவில்லை. கோ, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல், ரகளபுரம், வெற்றி செல்வன், அஞ்சான் என இன்று வரை சிறிய கேரக்டர்களில்தான் நடித்து வருகிறார். இப்போதும் சுமார் 10 படங்கள் நடித்து வருகிறார். அதிலும் அப்படித்தான். ஆனாலும் சஞ்சனாசிங் அசரவில்லை. மூன்று மாத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு தன் ஹீரோயின் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.