பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தென்னிந்தியத் திரையுலகில் தற்போது பிஸியான நடிகை என்றால் அனுஷ்கா மட்டுமே. ஒரே சமயத்தில் நான்கு பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்துடன் 'லிங்கா', அஜித்துடன் பெயரிடப்படாத படம், தெலுங்கில் “பாகுபலி, ருத்ரமா தேவி” ஆகிய படங்களில் நாயகியாக நடிக்கிறார். இரவு, பகலாக தொடர்ந்து மாறி மாறி இந்தப் படங்களில் நடித்தததால் சிறிது கூட ஓய்வு இல்லாமல் இருந்தாராம்.
தற்போது ஒரு பத்து நாள் எந்தப் படப்பிடிப்பும் இல்லாமல் சிறிய இடைவெளி கிடைத்ததாம். அதனால், ஓய்வு எடுப்பதற்காக தனிமையான ஒரு இடத்திற்குப் பறந்துவிட்டாராம். அவர் எங்கே சென்றார் என்பது திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கே தெரியவில்லை. தொடர்பு எல்லைக்கு அப்பால் அவர் சென்று விட்டதாக மட்டும் சொல்கிறார்கள்.
வரும் மாதங்கள் அனுஷ்கா மாதம் என்று சொல்லுமளவிற்கு அடுத்த ஆண்டு வரை தமிழிலும், தெலுங்கிலும் அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் வெளிவர இருக்கின்றன. அந்தப் படங்கள் வெளிவரும் வரை பிரமோஷன், இசை வெளியீடு என பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் கிடைத்த இந்த பத்து நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும் என்றே யாருக்கும் தெரியாத ஒரு இடத்திற்கு சென்றிருக்கிறார் என்கிறார்கள்.