விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பெல்லம்கொண்டா சீனிவாஸ். இவர் தற்போது தயாரித்துள்ள 'ரபாஷா' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான ஜுனியர் என்டிஆர், சமந்தா, பிரணீதா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதைப் பற்றி இதுவரை எந்த விதமான விளம்பரங்களையும் தயாரிப்பாளர் பெரிய அளவில் செய்யவில்லையாம். இதனால், தயாரிப்பாளருக்கும், ஜுனியர் என்டிஆருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளதாம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் அவருடைய மகனை நாயகனாக அறிமுகப்படுத்திய 'அல்லுடு சீனு' என்ற படத்திற்காக விளம்பரத்திற்காக மட்டும் கோடிகளை வாரி இறைத்தாராம். அது மட்டுமல்ல 'தூம்' போன்ற கதைகள் தனது மகனுக்குக் கிடைத்தால் விளம்பரத்திற்காகவே 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக உள்ளேன் என்று அறிவித்தாராம். மகனுக்காக 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருப்பவர் ஒரு முன்னணி ஹீரோ நடித்த படத்திற்கு செலவு செய்யாமல் இருக்கிறாரே என டோலிவுட்டில் திகைத்துப் போயிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே, படத்தின் வெளியீட்டை பல முறை தள்ளிப் போட்டதில் நடிகரின் ரசிகர்கள் அப்செட்டாக உள்ளார்களாம். இப்போது இந்த விளம்பரப் பிரச்சனை வேறு தலைதூக்கியுள்ளது. இது எங்கே போய் முடியுமோ என டோலிவுட் வட்டாரங்கள் காத்திருக்கிறார்களாம்.