பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பெல்லம்கொண்டா சீனிவாஸ். இவர் தற்போது தயாரித்துள்ள 'ரபாஷா' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோவான ஜுனியர் என்டிஆர், சமந்தா, பிரணீதா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதைப் பற்றி இதுவரை எந்த விதமான விளம்பரங்களையும் தயாரிப்பாளர் பெரிய அளவில் செய்யவில்லையாம். இதனால், தயாரிப்பாளருக்கும், ஜுனியர் என்டிஆருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளதாம்.
இப்படத்தின் தயாரிப்பாளர் அவருடைய மகனை நாயகனாக அறிமுகப்படுத்திய 'அல்லுடு சீனு' என்ற படத்திற்காக விளம்பரத்திற்காக மட்டும் கோடிகளை வாரி இறைத்தாராம். அது மட்டுமல்ல 'தூம்' போன்ற கதைகள் தனது மகனுக்குக் கிடைத்தால் விளம்பரத்திற்காகவே 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக உள்ளேன் என்று அறிவித்தாராம். மகனுக்காக 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருப்பவர் ஒரு முன்னணி ஹீரோ நடித்த படத்திற்கு செலவு செய்யாமல் இருக்கிறாரே என டோலிவுட்டில் திகைத்துப் போயிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே, படத்தின் வெளியீட்டை பல முறை தள்ளிப் போட்டதில் நடிகரின் ரசிகர்கள் அப்செட்டாக உள்ளார்களாம். இப்போது இந்த விளம்பரப் பிரச்சனை வேறு தலைதூக்கியுள்ளது. இது எங்கே போய் முடியுமோ என டோலிவுட் வட்டாரங்கள் காத்திருக்கிறார்களாம்.