டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஐ' படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் 'ஐ' படத்திற்காக மட்டுமே உழைத்து வருகிறார். எதைப் பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாமல் முழு அர்ப்பணிப்புடன் படத்தில் அவர் நடித்துக் கொடுத்துள்ளதாக பாராட்டுகிறார்கள். இதுதான் அவருடைய தனித்துவம் என்கிறார்கள்.
படத்தில் அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒரு தோற்றத்திற்காக மட்டும் ஏறக்குறைய 12 மணி நேரம் மேக்கப் போட வேண்டுமாம். அதை அவ்வளவு பொறுமையாக ஏற்றுக் கொண்டு, அதன் பின் நடிக்க வருவாராம். ஒரு தோற்றத்திற்காக தன்னை 120 கிலோ எடை கொண்டவராக மாற்றியவர், பின்னர் வேறு ஒரு தோற்றத்திற்காக 60 கிலோ வரை குறைத்துக் கெண்டாராம். இந்த அளவிற்கு கடுமையாக உழைக்கும் தமிழ் நடிகர்கள், ஏன் இந்திய நடிகர்கள் யாருமே இல்லை என விக்ரமை பாராட்டித் தள்ளுகிறார்கள் படக்குழுவினர்.
மேக்கப்பும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் படத்தின் ஹைலைட்டான விஷயங்களாம். அந்த இரண்டுமே இதுவரை தமிழ் சினிமா பார்த்திருக்காத அளவிற்கு கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள். சீனாவில் மட்டும் ஒரு சண்டைக் காட்சி மற்றும் பாடல் காட்சியை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தைப் பார்த்து ரசிகர்கள் நிச்சயம் ஆச்சயரிப்படுவார்களாம். 'ஐ' படம் தீபாவளிக்கு வர இருப்பதை முன்னிட்டு மற்ற நடிகர்கள் அவர்களது படங்களை தள்ளி வைக்க முடிவு செய்துவிட்டார்களாம்.