வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு எதிராக சதீஷ்பால் என்பவர், என்னுடைய ஒரு மழைக் காலத்து நாவலிலிருந்துதான் த்ரிஷ்யம் படத்தின் கதை எடுக்கப்பட்டது. எனவே த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதற்கிடையில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு துவங்க வேண்டிய நாள் நெருங்கி வர...கோர்ட் தீர்ப்பு எப்படி வருமோ என கலக்கத்தில் இருந்தது பாபநாசம் யூனிட்.
இந்நிலையில், சதீஷ்பாலின் வாதத்தை ஏற்று, த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்யக்கூடாது அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நேற்று முதல் திருநெல்வேலியில் கமல், கௌதமி பங்குபெறும் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு குறித்து விசாரித்தபோது, நீதிமன்றத்தில் கட்ட வேண்டிய அபாரதத் தொகை 10 லட்ச ரூபாயை செலுத்திவிட்டுத்தான் படப்பிடிப்பைத் துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள் பாபநாசம் படக்குழுவினர்.
த்ரிஷ்யம் படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தையும் இயக்குகிறார். போலீஸ் வேடமொன்றில் கலாபவன் மணியும், போலீஸ் ஐ.ஜியாக ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ஜில்லாவில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள்.