ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழ்நாட்டில் எப்படி தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறதோ இதேபோல் கேரளாவிலும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாலியல் குற்றங்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெற்று வந்ததோடு, பள்ளி மாணவிகள், பெண்கள் வெளியில் செல்லவே பயந்து போயிருந்தார்களாம். இதுகுறித்து பல அமைப்புகள், கட்சிகள் பூரண மது விலக்கு கோரி போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
நடிகர் மம்மூட்டியும் ஒரு போராட்டத்தில் மது விலக்கை அமல் செய்யக்கோரி போராட்டம் நடத்தினார். இப்படி பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததால் இப்போது கேரளாவில் பூரண மது விலக்கினை அமல் செய்ய அங்குள்ள மாநில அரசு முடிவு செய்திருக்கிறதாம்.
இந்நிலையில், சமீபத்தில் கொச்சினில் 12 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஒரு விழிப்புணர்வு பேரணியில் நடிகர் மம்மூட்டியும் கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் போதை பொருட்களை அனுமதிக்கக்கூடாது மற்றும் போதையின் தீமைகளை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்று மாணவர்களிடையே பேசிய மம்மூட்டி, கேரளா அரசு மதுக்கடையை மூட உத்தரவிட்டிருப்பதற்கும் அந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டாராம்.