ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வருஷம் 16 படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தபடி கோடம்பாக்கத்திற்குள் வந்தவர்தான் குஷ்பு. அதையடுத்து ரஜினி, கமல், பிரபு, அர்ஜூன் என முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்தார். அதோடு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமான அவருக்கு கோயில்கூட கட்டினார்கள். அதோடு குஷ்பு இட்லி, குஷ்பு வளையல் என்றெல்லாம் விற்கிற பொருட்களுக்கும் அவர் பெயர் வைத்து அமோக வியாபாரம் செய்தனர்.
இப்படி பிரபலமான குஷ்பு. பின்னர் டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி, அரசியல்வாதியாகவும் மாறி, இப்போது மீண்டும் சினிமாவில் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில், சினிமாவில் நடக்கும் காரசார விவாதங்களில் தானும் தைரியமாக கருத்து கூறி வரும் குஷ்பு. சமீபத்தில் இணையதள ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது,
கும்பகோணத்தில நடைபெற்ற தீ விபத்தில் பள்ளி குழந்தைகள் இறந்ததில் இருந்து நான் நாத்திகவாதியாகி விட்டேன் என்று குறிப்பிட்டிருப்பவர், பெண்களுக்கு தன்னம்பிக்கை முக்கியம். எனக்கு அது அதிகமாகவே இருக்கிறது என்று பதிலளித்தார். மேலும், இணையதளங்களில் விஜய்-அஜீத் ரசிகர்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்கிறார்கள். இது அவர்களது குழந்தைத்தனமான முதிர்ச்சியற்ற தனமையை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.