டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திற்கு பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் பாரதிராஜா. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடக்கிறது. ஒரு சிறிய பகுதி தேனியை சுற்றி படமாக்கப்படுகிறது. லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் கதை. லண்டனில் வேலை கிடைத்து குடியேறிய மகன் வீட்டுக்கு கிராமத்திலிருந்து செல்கிறார் தந்தை. அங்கு தாத்தாவுக்கும், பேரனுக்கும் நடக்கும் உறவும், உணர்வும் தான் கதை. தாத்தாவாக பாரதிராஜாவே நடிக்கிறார். பேரனாக நல்ல குழந்தை நட்சத்திரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். இது தவிர ஒரு புதுமுக ஹீரோ, ஹீரோயின்களும் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார். லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தயாரிக்கிறார். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.