‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் சமீபத்தில் வெளிவந்தது. படத்தை பார்த்த பார்த்திபனின் குருநாதரும், இயக்குனருமாக கே.பாக்யராஜ் அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: பாசமுள்ள சிஷ்யன் பார்த்திபனுக்கு பாக்யராஜ் எழுதுவது, புதிய பாதையில் தொடங்கி, பயணத்தின் ஊடே நீ சற்று தூரமும், சற்று நேரமும் கரடுமுரடான கற்பரப்பினை கடக்க வேண்டி இருந்தது. இதை நானும் அனுபவித்தவனே...
ஆனால் நீ மாற்றுப்பாதை தேடாமல் விடா முயற்சியுடன் கடந்து தற்போது மீண்டும் ஒரு புத்தம் புதிய பாதையினை கண்டு அதில் காலடி எடுத்து வைத்துவிட்டாய். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்தபோது இதை உணர்ந்து மகிழ்ந்தேன்.
இப்போது சினிமாவின் டிரண்ட் மாறிவிட்டது என்று பலரும் கூறுவதுண்டு. அந்த டிரண்டை நீ மாற்றிவிட்டாய். இப்போதைய இளைஞர்கள், லேட்டஸ்ட் டெக்னிக்கில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்பவர்கள் உனது படம் பார்த்ததும் லேட்டஸ்ட்டிலும் லேட்டஸ்ட் இது என்று ஒப்புக் கொள்வார்கள். உன் டெக்னிக்கை பார்த்து நான் பொறமைப் பட்டேன் என்பது உண்மை.
நான் கதை சொல்பவன் அதை மிக நேர்த்தியாக சொல்பவன்தான் ஆனால் அலங்காரமாக சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்ள மாட்டேன். இந்தப் படத்தில் நீ உன்னையும் தாண்டி அழகாக செய்திருக்கிறாய், செதுக்கியிருக்கிறாய்.
உனது எடை அவ்வப்போது கூடும். உன் மூளையின் எடையும் கூடி வந்திருப்பதை அறிந்து பூரிப்பு கொள்கிறேன். தியேட்டரில் எழுந்த ஒவ்வொரு கைதட்டலும் உன்னைத் தாண்டி என்னிடம் வந்து சேர்ந்தது. இதயம் குளிர அள்ளிக் கொண்டேன்.
என் குரு (பாரதிராஜா) 74 வயதிலும் தெம்புடன் பூஜை போட்டுக் கொண்டிருக்கிறார். இதே கவனமும், பொறுப்பும் தொடருமானால் நீ என் குருவின் வயதில் வெற்றி விழாக்களில் உலா வருவாய் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பாக்யராஜ் எழுதியுள்ளார்.