விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
இம்ரான் அப்பாஸ், பிபாஷா பாசு நடிக்கும் இந்திப் படம் கிரியேச்சர் 3டி. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டியில் நடந்தது. வில்லன்கள் துரத்துவது போலவும். அவர்களிடமிருந்து பிபாசா தப்பித்து ஓடுவது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது கால் தடுக்கி கீழே விழுந்த பிபாசாவுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. கதைப்படி பிபாசா பாசு டல் மேக்அப்புடன் நடித்து வந்தார். தற்போது முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டதால் அதிக மேக்-அப் போட்டு நடிக்க வேண்டியதாகிவிட்டது.
இதுகுறித்து பிபாசா பாசு கூறியிருப்பதாவது: ஆக்ஷன், சேசிங் காட்சிகளில் நடிக்க எனக்கு பிடிக்கும். அதனால்தான் டூப் போடாமல் நானே நடித்தேன். எனது கவனகுறைவால் தவறி விழுந்தேன். இந்த கதையில் நான் நடுத்தர வர்க்கத்து சாதாரண பொண்ணு. அதனால் சுமாரான மேக்-அப்புடன் தான் நடித்தேன். கீழே விழுந்து முகத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டதால் அதை மறைக்க அதிக மேக்-அப் போட வேண்டியதாகிவிட்டது. ஒரு கையில் காயத்தை மறைக்க மேக்-அப்பும் இன்னொரு கையில் காயம்பட்டது போன்ற மேக்அப்பும் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது விந்தையான ஒன்று. எப்படியோ படத்தை முடித்து விட்டோம். என்கிறார் பிபாசா பாசு. படம் செப்டம்பர் 12ந் தேதி ரிலீசாகிறது.