இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நரேன் - சூரி இணைந்து நடிக்கும் புதிய படம் - கத்துக்குட்டி. இந்தப் படத்தில் ஹீரோவுக்கு இணையான மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூரி. அவருக்கு ஜோடியாக பல சீரியல்களில் நடித்த சின்னத்திரை நாயகி தேவிப்பிரியா நடிக்கிறார். கத்துக்குட்டி படத்தில் சீரியல்கள் ஒன்றுவிடாமல் பார்த்து தேவிப்ரியாவின் வெறித்தனமான ரசிகரானவராக நடிக்கிறார் சூரி. ரியல் எஸ்டேட் விளம்பரத்துக்காக தஞ்சாவூர் அருகே உள்ள கன்னந்தங்குடி என்ற கிராமத்துக்கு வருகிறார் தேவிப்பிரியா.
தேவிப்பிரியாவின் ரசிகரான சூரி, தேவிப்பிரியாவைப் பார்க்க கையில் உள்ள பணத்தை எல்லாம்போட்டு மிகப் பெரிய மாலையைக் வாங்கிக்கொண்டு ஆவலோடு வருவாராம். ஆனால், தேவிப்ரியாவை பார்க்க கூடியிருந்த மக்கள் கூட்டம் கடுமையாக முண்டியடித்து சூரியை அருகே நெருங்க விடாமல் செய்துவிடுகிறது. இதனால் மிகவும் மனம் வெறுத்துப்போன சூரியை நண்பர்கள் மனதைத் தேற்றி அழைத்து வருவார்கள். அதில் சமாதானம் ஆகாமல் தேவிப்பிரியாவை காரோடு கடத்திக்கொண்டு போய் விடுவாராம் சூரி.
பிதாமகன் படத்தில் சிமரனை சூர்யா கடத்துவதுபோல் இந்தப் படத்தில் தேவிப்ரியாவை கடத்திக்கொண்டுபோய் டார்ச்சர் பண்ணுவாராம் சூரி. பிறகு தேவிப்ரியாவுக்கு சூரி மீது காதல் வந்து.. இப்படி போகிறதாம் கத்துக்குட்டி கதை...!