தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
நேரம் படத்தில் வில்லனாக நடித்தவர் சிம்ஹா. அதையடுத்து அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்துள்ள இன்னொரு படம்தான் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தபோதும், சிம்ஹாவை சுற்றியே கதை பின்னப்பட்டிருந்ததால் அவரது கதாபாத்திரமே பேசப்பட்டது. அதனால், ஒரே படத்தில் ஓஹோவென்று பேசப்படும் வில்லனாகி விட்டார் சிம்ஹா.
இதுபற்றி அவர் கூறுகையில், ஜிகர்தண்டாவில் சித்தார்த்தின் நண்பராக நடித்த கருணாகரன், நிஜத்தில் எனது நண்பர். அவர் மூலமாகத்தான் இந்த பட வாய்ப்பே எனக்கு கிடைத்தது. மேலும், வில்லன் என்றதும் வழக்கம்போல்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். அதுவும் மதுரை ரவுடி என்பதால், ஒரு பத்து பேரை வெட்டி சாய்க்க வேண்டியிருக்கும். போலீஸ் துரத்தும். அதன்பிறகு ஹீரோ வந்து நம்மை அழிப்பார் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், எனது கணிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வில்லன் வேடத்தை கார்த்திக் சுப்புராஜ் எனக்கு கொடுத்தார். அந்த வகையில் ஜிகர்தண்டா ஸ்கிரிப்ட்டே புதுமையானது. அதிலும் ரவுடியின் கதையை படமாக்க வந்த ஹீரோ அதே ரவுடியை வைத்தே படமெடுப்பது இதுவரை பார்த்திராத கதை. அதிலும் ரவுடியான என்னை நடிக்க வைக்க அவர்கள் கொடுத்த பயிற்சி இன்னும் வித்தியாசமாக அமைந்தது என்று கூறும் பாபி சிம்ஹா, ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் எனக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை வாங்கித் தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதனால் இந்த படம் மூலம் எனக்கு கிடைத்த எல்லா புகழும் அவரையே சாரும் என்கிறார்.