துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
ராணி முகர்ஜி நாயகியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மர்தானி. இந்தப்படத்தில் கம்பீரமான பெண் போலீஸ் அதிகாரியாக, விபச்சாரத்தை அடக்கும் போலீஸ் ராணியாக, ராணி முகர்ஜி நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அதனால் அங்கும் இப்படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இப்படம் வெளியாகவில்லை.
படத்தில் ஏகப்பட்ட வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி பாகிஸ்தான் சென்சார் போர்டு, 7 காட்சிகளையும், சில காட்சிகளுக்கு வசனத்தின் ஆடியோவை கட் செய்ய சொல்லியும் படக்குழுவிடம் கூறியது. ஆனால் படக்குழுவோ, படத்திற்கு அந்த காட்சிகள் அனைத்தும் முக்கியமானது என்று கூறி கட் செய்ய மறுத்து விட்டது. இதனால் மர்தானி படம் பாகிஸ்தானில் வெளியாகவில்லை.