ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, இந்தியில் பர்பி படம் மூலம் பிரபலமானார். மனநிலம் குன்றியவர்களின் வாழ்க்கையை அழகாக சொன்ன இப்படத்தில் ரன்பீர் கபூர்-ப்ரியங்கா சோப்ரா ஆகியோருடன் இலியானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் பாராட்டுகளை பெற்ற இப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகள் பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்காக இலியானாவுக்கும் விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் இப்படம் இப்போது செர்பியா நாட்டிலும் திரையிடப்பட இருக்கிறது. பெல்கிரேடில் உள்ள இந்திய தூதரகம், ஸ்டூடண்ட்ஸ் பார்க்கில் இப்படத்தை நாளை திரையிடுகிறது.