டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பார்த்திபன் இயக்கிய, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த ஆகஸ்ட் 15ந் தேதி வெளியானது. "இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். யாரும் திருட்டு விசிடி போடாதீங்க அப்படி போட்டா உங்களுக்கு ஆண்டவன் மரண அடி கொடுப்பான்" என்ற பார்த்திபன் விளம்பரம் செய்தார். உருக்கமான வேண்டுகோள் வைத்தார். ஆனால் அதையெல்லாம் மீறி படத்தின் திருட்டு விசிடி 30 ரூபாய்க்கு தாரளமாக கிடைக்கிறது. இதனால் நொந்து போன பார்த்திபன் படத்தின் வெற்றி சந்திப்பின் போது திருட்டு விசிடியை தடுக்க நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன் என்றார்.
அதன்படி நேற்று முன்தினம் பார்த்திபன் தன் உதவியாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்னை நகரை சுற்றினார். பாரிமுனை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள சில கடைகளுக்கு உதவியாளர்களை அனுப்பி வாடிக்கையாளர்போல நடித்து தன் படத்தின் விசிடியை கேட்க வைத்தார். அதில் 2 கடைகளில் அவரிடன் பட சி.டி கிடைத்து. உடனே அந்த கடைக்குள் சென்ற பார்த்திபன் அங்குள்ள சிடிக்களை அள்ளிக் கொண்டு போலீசுக்கு போன் செய்தார். விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரை கைது செய்து சிடிக்களையும் கைப்பற்றினர். இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்று பார்த்திபன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருட்டு விசிடிக்கள், கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள அஷ்டலட்சுமி தியேட்டரில் இருந்து தயாரிக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த தியேட்டருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு எந்த படத்தையும் திரையிட முடியாத அளவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் இந்த முயற்சி திரையுலகினரை வியக்க வைத்துள்ளது, மேலும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.