ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னாள் பிரதமர் இந்திரா 1984ம் ஆண்டு தனது பாதுபாப்பு படையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தியும், கொலை செய்த பீண்ட் சிங், சத்வத் சிங் ஆகியோரது வாழ்கையை மையமாக வைத்தும் கவும் தே ஹீரே என்ற படம் பஞ்சாபி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபியின் முன்னணி நடிகர்களான ராஜ் குந்த்ரா, சுக்தீப் சிக் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ரவீந்தர் ரவி என்பவர் இயக்கி உள்ளார்.
இந்தப் படம் நேற்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் படத்தை வெளியிட மத்திய அரசு கடைசி நேரத்தில் தடைவிதித்து விட்டது. "இந்தப் படம் வெளிவந்தால் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவர் லீலா சாம்சன் தெரிவித்துள்ளார்.