இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மிமிக்ரி காமெடி மூலம் தொலைக்காட்சியில் புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். வாய்மூடி பேசுவோம் படத்தில் முழுநீள காமெடியானாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.
ரோபோ சங்கருக்கு அவரது ரசிகர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியிருக்கிறார்கள். விழுப்புரத்தில் வானவில் என்பவரை தலைவராக கொண்டு காமெடி கிங் ரோபோ சங்கர் நற்பணி மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள மன்றத்தில் தற்போது 15 பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். சமீபத்தில் ரோபோ சங்கரின் பிறந்த நாளை கொண்டாடிய இவர்கள் அன்னதானம், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், விளையாட்டு போட்டிகள் என பல விழாக்களை நடத்தி அசத்தினார்கள். விரைவில் மன்றத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவு படுத்த இருக்கிறார்களாம்.
"என் பெயரில் மன்றம் தொடங்கி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செய்வது புண்ணியம். அதை என் பெயரில் செய்கிறார்கள்" என்கிறார் ரோபோ சங்கர்.