எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
ராம்கோபால்வர்மா இயக்கத்தில் தமிழில் வெளியாகயிருந்த படம் நான்தான்டா. இந்த படத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்திருந்த சர்வானந்த் நாயகனாக நடித்திருந்தார். ஆக்சன் கதையில் உருவான இந்த படத்தின் நாயகியாக அனைகா என்ற புதுமுகம் நடித்திருந்தார். அந்த படத்தை வெளியிடுவதற்காக சென்னையில் பிரஸ்மீட்டெல்லாம் நடத்தினார் ராம்கோபால்வர்மா. ஆனால், படம் விற்பனையாகவில்லை..
அதனால் சர்வானந்த் நடித்துள்ள ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் திரைக்கு வரும்போது, நான்தான்டா படத்தை வெளியிடலாம் என்று நிலுவையில் வைத்திருக்கிறார். ஆனால் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படமும் வெளியாவதில் இழுபறி நிலை நீடிப்பதால் நான்தான்டா எப்போது திரைக்கு வரும் என்பதே புதிராக இருந்தது. அதோடு, சர்வானந்துக்கும் தமிழ் சினிமா மீதான நம்பிககை போய் விட்டது. அதனால் தாய்மொழியான தெலுங்கில் கவனத்தை திருப்பி விட்டார்.
இந்த நிலையில், நான்தான்டா படத்தில் நாயகியாக நடித்துள்ள அனைகாவுக்கு வசந்தபாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சித்தார்த்துடன் அவருக்கு டூயட் பாடல் காட்சியும் உள்ளது. அதனால் இப்போதே கோடம்பாக்கத்தின் கவனத்துக்கு வந்து விட்டார் அனைகா.
விளைவு, இதுவரை ஜேகே எனும் நண்பனின் கதை படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராம்கோபால்வர்மா, இப்போது அனைகா நடித்துள்ள காவியத்தலைவன் வெளியானால், நான்தான்டா படத்தை வெளியிட்டு விடவேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.