ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
ராணி முகர்ஜி நாயகியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மர்தானி திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராணி முகர்ஜி, இயக்குனர்களுக்கு சம்மதம் இருந்தால், தான் கர்ப்பம் ஆனாலும் நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்தான் பிரபல தயாரிப்பாளரான ஆதித்ய சோப்ராவைத் திருமணம் செய்து கொண்டார் ராணி முகர்ஜி. திருமணம் முடிந்ததும் பெண்கள் அவர்களது சில வேலைகளிலிருந்து ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். அதிலும் கர்ப்பமடைந்து விட்டால், உடல் ரீதியாக அவர்களால் சரியாக செயல்படமுடியாது என்பது ஒரு காரணம். ஹாலிவுட்டில் பல நடிகைகள் கர்ப்பமாக இருந்தாலும் நடிக்கிறார்கள். இயக்குனர்களுக்கு சம்மதம் இருந்தால், நான் கர்ப்பம் ஆனாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஒரு மனைவிக்கு அவரது கணவர் அமைவதைப் பொறுத்துதான் அவரது வாழ்கையும் அமைகிறது. எனது கணவர் மிகவும் ஆதரவானவர். அவர் என்னுடைய நடிப்பை குறைத்துக் கொள்வதை விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் நான் தாயான பின் என்ன முடிவு எடுப்பேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் என்னுடைய தொழிலை மிகவும் நேசிக்கிறேன்.
ஒரு நடிகை வெற்றி பெற்றால் அவரைப் பாராட்டுவார்கள். அதே அவர் தோல்வியைக் கொடுத்தால் கிண்டல் செய்வார்கள். அப்போதுதான் அவர் திருமணம் ஆனவரா இல்லையா என்னபதைப் பற்றிய ஆராய்ச்சி வரும். நான் நடித்துள்ள 'மர்தானி' படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.