கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மாநிலப் பிரிவினைக்குப் பின் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் தெலுங்குத் திரையுலகம் விரைவிலேயே இரு இடங்களில் செயல்பட ஆரம்பித்து விடும் என்று நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திரையுலகப் பிரமுகர்கள் ஐதராபாத்தில் மிகப் பெரிய திரைப்பட நகரை உருவாக்கத் திட்டமிட்டு, மாநில முதல்வரைச் சந்தித்து 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கும் திட்டத்திற்கு வழிவகை செய்துவிட்டனர். அதே சமயம், ஆந்திராவில் விசாகப்பட்டினத்தை திரைப்பட நகராக மாற்ற வேண்டும் என அம்மாநிலத்தைச் சேர்ந்த திரையுலகப் பிரமுகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச அரசும் விசாகப்பட்டினத்தை திரைப்பட நகரமாக உருவாக்க முயற்சிகள் எடுத்து வருவதாகவும், தயாரிப்பாளர்களிடம் அதை செயல்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் ஆந்திர மாநில அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். பல திரைப்பட அமைப்புகள் ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். திரைப்படங்கள் தயாரிப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டார்களாம். ஒரே இடத்தில் அனைத்து விதமான அனுமதிகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு திரையுலகம் மாற்றப்பட்ட போது வழங்கப்பட்ட பல சலுகைகள் போலவே இந்த முறையும் வழங்க வேண்டுமென அவர்கள் கேட்டுள்ளார்களாம்.
விசாகப்பட்டினத்தில் திரைப்பட நகரம் அமைவதற்கான பேச்சு ஆரம்பமான சூழ்நிலையிலேயே அங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டதாம். சிரஞ்சீவி உட்பல பலர் அங்கு ஸ்டுடியோக்களை நிர்மாணிக்க உள்ளனர் என்ற செய்தி பரவியதன் காரணமாக வீடு, மனைகள் விற்பனை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாம். சிரஞ்சீவி அங்கு ஸ்டுடியோ கட்டுவதெல்லாம் பொய்ச் செய்திதான் என்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகம் தற்போது இரண்டு நகரங்களுக்கிடையே தள்ளாடி வருவது அங்குள்ள பல கலைஞர்களை வருத்தப்பட வைத்துள்ளது என்றும் பேச்சு எழுந்துள்ளது.