கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ ஆனவர்களில் சரத்குமாரும் ஒருவர். அப்படி அவர் வில்லனாக நடித்த படங்களில் விஜயகாந்துடன் நடித்த புலன் விசாரணை படம் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. அந்த பெயரோடு அதன்பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் பவித்ரன் இயக்கத்தில் நடித்த சூரியன் படம் சரத்குமாருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரோஜா நடித்திருந்தார்.
அதன்பிறகு நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை உள்பட சில படங்களில் இரண்டு வேடங்களிலும் நடித்தார். ஆனால் அப்பா-மகன், அண்ணன்-தம்பி இந்த மாதிரிதான் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான வேடங்களில் நடிக்கிறார். இந்த இரண்டு வேடங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாதாம்.
அதோடு உருவ ஒற்றுமை இல்லாத அளவுக்கு கெட்டப்பில் நிறைய வித்தியாசப்படுத்தி நடிக்கிறாராம் சரத்குமார். முக்கியமாக, சாதாரணமாக ஹீரோக்கள் வில்லனாக நடித்தால் ஒரு வட்டத்துக்குள்தான் நடிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் சரத்குமார் நடித்துள்ள வில்லன் வேடம் மிகக்கொடூரமானதாம். கடுகளவும் ஈவு இரக்கம் என்பதே இல்லாத வில்லனாக நடித்து வருகிறாராம். அந்த வகையில், ஹீரோ சரத்குமாரை விட வில்லன் சரத்குமாருக்கு கோலிவுட்டில் ஒரு பெரிய என்ட்ரி இருக்கும் என்று சரத்குமார் எதிர்பார்க்கிறாராம்.