'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர்களில் அர்ஜூன் கபூரும் ஒருவர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகனான இவர், இந்தியில் 4 படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். அதில் 2 ஸ்டேட்ஸ் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதில் ஒன்றுதான் தேவார்.
இந்த படத்தில் ஸ்ரீதேவியின் சிபாரிசின் பேரில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, அர்ஜூன்கபூர், ஸ்ருதி இருவரையும் சுற்றி பல குதிரைகளை நிறுத்தி படமாக்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு குதிரையின் அருகே நின்றபடி ஸ்ருதிஹாசன் நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த குதிரை தனது காலால் மீண்டும் மீண்டும் எட்டி உதைத்திருக்கிறது.
ஆனால் அதை கவனிக்காமல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஸ்ருதி. அவருடன் ஆடிய அர்ஜூன்கபூர் அதை கண்டதும், உடனடியாக பாய்ந்து சென்று ஸ்ருதிஹாசனை குதிரை மிதிக்காத வகையில் வெளியே இழுத்து வந்திருக்கிறார். இதனால் அந்த குதிரையிடம் உதை படாமல் தப்பியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து, தன்னை குதிரை தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோவான அர்ஜூன்கபூருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.