கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தெலுங்கு சினிமாவில் எழுத்தாளராக கொடிகட்டி பறப்பவர் கோனா வெங்கட். இவர் தெலுங்கு பட உலகில் சவாலாகவே பல படங்களை பேச வைத்துள்ளார். இவர் எழுத்தில் வெளியாகியுள்ள பவர், பலுப்பு, ஷாடவ், பாஷா, தூக்டு, டான் சீனு, ரெடி, ஷாக், ஹாப்பி... என்று இவரின் வெற்றிப்பட வரிசைகள் ஏராளம். 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்கள், 5 பிளாக்பஸ்டர் படங்கள் என்று கோனாவின் எழுத்து, தெலுங்கு பட உலகை ஆட்டி படைக்கிறது. இவரின் எழுத்திற்கு ரசிகர்களின் கைதட்டல்கள் காதை கிழிக்கிறது. திரையரங்கில், சமீபத்தில் அஞ்சலியை வைத்து எடுத்த இவரின் கீதாஞ்சலி படம் இதுவரை ஹவுஸ்புல் காட்சியாக ஓடுகிறது. இதைப்பற்றி, அவரை தொடர்பு கொண்டு கேட்டோம்... ஏனெனில் நடித்தது நம் அஞ்சலியாச்சே... சரி, இனி கோனா பேசுகிறார்...
இதுவரையில் 40க்கும் மேற்பட்ட படங்களில் வேலை பார்த்த அனுபவம், ஒரு எழுத்தாளனாக அடையாளம் காணப்பட்டேன். பரவலாக தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் பேசப்பட்டேன். ஆனால் கீதாஞ்சலி படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால், இந்த படத்தை எழுதி, நண்பர்களோடு சேர்ந்து தயாரித்து இருக்கேன். எம்.டபிள்யூ., சினிமா என்ற பேனரில், என் நண்பர்கள் அந்திராவில் 2000 கட்டடங்களுக்கு மேல் கட்டியவர்கள். பில்டர்ஸ், அவங்களை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கேன்.
ராஜ்கிரண் என்ற புது இயக்குனரை அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆகஸ்ட் 9ம் தேதி படம் ரிலீஸானது. இன்று வரை ஹவுஸ்புல் காட்சி. 300 திரை அரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. படம் புதுகளம், காமெடி ஹரார் பிலிம். படத்தில் நடிப்பவர்கள் பயந்து பதறி நடிப்பார்கள், படம் பார்ப்பவர்களுக்கு காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருக்கும். இதில் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே அஞ்சலி தான். நடிப்பில் ஒரு புது பரிமாணம், அவரை பற்றி வந்த அத்தனை செய்திகளையும் தவிடு பொடியாக்கி, தன் நடிப்பால், அந்த ரோலில் சக்கை போடு போட்டிருக்கிறார். அவர் நடிப்புக்கு நல்ல தீனி. எப்படி அனுஷ்காவுக்கு ஒரு அருந்ததீ கிடைத்ததோ அதைப்போல அஞ்சலிக்கு கீதாஞ்சலி கிடைத்திருக்கு. அதனால் ஆந்திரா மக்கள் அவரை கொண்டாடுகின்றனர்.
இசை புதுமுகம் பிரவீன். நியூஜெர்சியில் அவரை சந்தித்தேன், அவர் கொடுத்த டியூன் நல்லா இருந்துச்சு. அப்படியே ஆந்திராவுக்கு தூக்கிட்டு வந்திட்டேன். இசையால் அவர் பங்குக்கு மிரட்டி இருக்கிறார். விரைவில் தமிழில் வெளியிட உள்ளேன். தமிழ் படங்களில் வேலை பார்க்க ஆசை தான், நன்கு தமிழ் பேசுவேன், நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக கோடம்பாக்கத்தையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறார் கோனா.
திறமையாளர்கள் எங்கிருந்தாலும், தமிழ் சினிமாவில் கைபிடித்து அழைத்து வருவார்கள் கோனா சார்...!!