Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவுக்கு-அருந்ததீ; அஞ்சலிக்கு-கீதாஞ்சலி! எழுத்தாளர் கோனா வெங்கட்டின் முதல் பேட்டி

22 ஆக, 2014 - 14:51 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு சினிமாவில் எழுத்தாளராக கொடிகட்டி பறப்பவர் கோனா வெங்கட். இவர் தெலுங்கு பட உலகில் சவாலாகவே பல படங்களை பேச வைத்துள்ளார். இவர் எழுத்தில் வெளியாகியுள்ள பவர், பலுப்பு, ஷாடவ், பாஷா, தூக்டு, டான் சீனு, ரெடி, ஷாக், ஹாப்பி... என்று இவரின் வெற்றிப்பட வரிசைகள் ஏராளம். 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்கள், 5 பிளாக்பஸ்டர் படங்கள் என்று கோனாவின் எழுத்து, தெலுங்கு பட உலகை ஆட்டி படைக்கிறது. இவரின் எழுத்திற்கு ரசிகர்களின் கைதட்டல்கள் காதை கிழிக்கிறது. திரையரங்கில், சமீபத்தில் அஞ்சலியை வைத்து எடுத்த இவரின் கீதாஞ்சலி படம் இதுவரை ஹவுஸ்புல் காட்சியாக ஓடுகிறது. இதைப்பற்றி, அவரை தொடர்பு கொண்டு கேட்டோம்... ஏனெனில் நடித்தது நம் அஞ்சலியாச்சே... சரி, இனி கோனா பேசுகிறார்...

இதுவரையில் 40க்கும் மேற்பட்ட படங்களில் வேலை பார்த்த அனுபவம், ஒரு எழுத்தாளனாக அடையாளம் காணப்பட்டேன். பரவலாக தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் பேசப்பட்டேன். ஆனால் கீதாஞ்சலி படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால், இந்த படத்தை எழுதி, நண்பர்களோடு சேர்ந்து தயாரித்து இருக்கேன். எம்.டபிள்யூ., சினிமா என்ற பேனரில், என் நண்பர்கள் அந்திராவில் 2000 கட்டடங்களுக்கு மேல் கட்டியவர்கள். பில்டர்ஸ், அவங்களை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கேன்.


ராஜ்கிரண் என்ற புது இயக்குனரை அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆகஸ்ட் 9ம் தேதி படம் ரிலீஸானது. இன்று வரை ஹவுஸ்புல் காட்சி. 300 திரை அரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடுகிறது. படம் புதுகளம், காமெடி ஹரார் பிலிம். படத்தில் நடிப்பவர்கள் பயந்து பதறி நடிப்பார்கள், படம் பார்ப்பவர்களுக்கு காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருக்கும். இதில் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே அஞ்சலி தான். நடிப்பில் ஒரு புது பரிமாணம், அவரை பற்றி வந்த அத்தனை செய்திகளையும் தவிடு பொடியாக்கி, தன் நடிப்பால், அந்த ரோலில் சக்கை போடு போட்டிருக்கிறார். அவர் நடிப்புக்கு நல்ல தீனி. எப்படி அனுஷ்காவுக்கு ஒரு அருந்ததீ கிடைத்ததோ அதைப்போல அஞ்சலிக்கு கீதாஞ்சலி கிடைத்திருக்கு. அதனால் ஆந்திரா மக்கள் அவரை கொண்டாடுகின்றனர்.


இசை புதுமுகம் பிரவீன். நியூஜெர்சியில் அவரை சந்தித்தேன், அவர் கொடுத்த டியூன் நல்லா இருந்துச்சு. அப்படியே ஆந்திராவுக்கு தூக்கிட்டு வந்திட்டேன். இசையால் அவர் பங்குக்கு மிரட்டி இருக்கிறார். விரைவில் தமிழில் வெளியிட உள்ளேன். தமிழ் படங்களில் வேலை பார்க்க ஆசை தான், நன்கு தமிழ் பேசுவேன், நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக கோடம்பாக்கத்தையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறார் கோனா.


திறமையாளர்கள் எங்கிருந்தாலும், தமிழ் சினிமாவில் கைபிடித்து அழைத்து வருவார்கள் கோனா சார்...!!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in