மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
1989ம் ஆண்டு புதிய பாதை என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்தவர் பார்த்திபன். அந்த முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. அதனால் தொடர்ந்து தன்னைத் தானே இயக்கி நாயகனாக நடித்து வந்த அவர், சமீபகாலமாக சில தோல்விகளையும் சந்தித்து வந்தார். இந்தநிலையில், கதையே இல்லாமல் அவர் இயக்கி வெளியிட்டுள்ள படம்தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அவரது கதையுள்ள படங்களே தோல்வியடைந்து வந்த நேரத்தில் கதையே இல்லாத இந்த படம் வெற்றி பெற்று பார்த்திபனுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
தனது 25 வருட சினிமா பயணத்தில் பார்த்திபனுக்கு இது 51வது படமாகும். இந்த படத்தைப்பொறுத்தவரை தான் ஒரு சீனில்கூட தலைகாட்டாமல் முழுக்க முழுக்க திரைக்கு பின்னாடியிருந்தே ஒரு முழு இயக்குனராகவே செயல்பட்டிருக்கிறார் அவர்.
அப்படத்தின் வெற்றிச்சந்திப்புக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பார்த்திபன். அந்த சந்திப்பின்போது அப்படத்தில் நடித்தவர்கள் மட்டுமின்றி டெக்னீசியன்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன் பேசுகையில்,
புதுமைப்பித்தன் என்றால் அது பார்த்திபனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். மேலும் இந்த படத்தை அவர் கதையே இல்லாத படம் என்கிறார். ஆனால் அதெல்லாம் ஒரு டிரிக்தான். ஏனென்றால் இந்த படத்தில் பல கதைகள் இருக்கிறது. ஒரு உதவி இயக்குனர் படம் இயக்குவதற்காக போராடுகிறான். அதில், தமிழ் சினிமா தன்னோட கதையை சொல்வது போல் ஒரு கதையும், தமிழ் சினிமா ஒரு கதையை எப்படி சொல்கிறது என இரண்டுவிதமான கதைகளுடன் படம் நகர்கிறது. இதில் பல்வேறு கதைகள் இருக்கிறது.
மேலும், ஒரு மனைவி தன்னோட ப்ரைவேஸியை இழந்து எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதை இன்னொரு கதை சொல்கிறது. ஒருவர் உதவி இயக்குனராகவே 50 வயதுக்கு மேலேயும் போராடிக்கொண்டிருக்கிறார். ஒரு வயதானவர், இறந்து போன ஒருவரை இருப்பது போல் நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார். இப்படி பலதரப்பட்ட கதைகள் இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் உள்ளது.
ஆக, இந்த படம் தமிழ் சினிமா தன்னோட கதையை சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. ஆனால் இந்த படம் தமிழ் சினிமாவை கேலி செய்யும் படமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது தமிழ் சினிமாவை சுயவிமர்சனம் செய்யும் படம்.
மேலும், இப்போதெல்லாம் ஜாதியையோ, மதத்தையோ முன்வைத்து கதை பண்ணினால் அந்த படங்களை ஏதாவது காரணம் சொல்லி ரிலீஸ் பண்ண விடாமல் செய்து விடுகிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில், கதையே இல்லாமல், நடிக்கிற கேரக்டர்களுக்கு பெயரே இல்லாமலும் படமெடுக்க முடியும் என்பதை இந்த படம் மூலம் உணர்த்தியிருக்கிறார் பார்த்திபன். இது இன்றைய சினிமாவுக்கு தேவையான மாற்றம். வரவேற்க வேண்டிய விசயம்.
இவ்வாறு அவர் பேசினார்.