பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நீண்ட நாளைக்குப்பிறகு தான் இயக்கிய படம் வெற்றி பெற்றிருப்பதால் அந்த வெற்றிக்களிப்பை ரசித்து ருசித்துக்கொண்டிருக்கிறார் பார்த்திபன். அதோடு, தான் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெற்றி பெற்றதற்கு தனது திரைக்கதையே காரணம் என்று அவர் நினைத்தாலும், அதற்கு நற்சான்றிதழ் கொடுத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவைத்தது பத்திரிகைகள்தான் என்பதையும் அவர் மறக்கவில்லை.
அதனால் நேற்றைய தினம் அவர் பத்திரிகைகளை சந்தித்து அதற்கான நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
அப்போது பார்த்திபன் பேசும்போது, இந்த படத்தை முதல் நாள் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடியபோது என்னையுமறியாமல் நான் அழுது விட்டேன். அதன்பிறகு பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்தபோது, அதிக உணர்ச்சிவசப்பட்டதால் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. காரணம் நான் மீடியாக்களை அதிகமாக நேகிக்கிறேன். அதன் பிரதிபலிப்புதான் என்னால் பேச முடியவில்லை. என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆகிவிட்டது.
மேலும் நான் ஜாலியாக இருப்பது போல் தெரியும். ஆனால் நான் அப்படி இருப்பதில்லை. சினிமா என்கிற தொழிலைப்பற்றி யோசிக்கும்போது எப்போதுமே நான் சீரியசாகவே இருக்கிறேன். அந்த தொழிலை விளையாட்டுத்தனமாக இல்லாமல் சீரியசாக செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். அந்த சீரியசான உழைப்புக்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி.
மேலும், இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு படமெடுத்து வெளியிட்டாலும், மனசாட்சி இல்லாத வியாபாரிகள் திருட்டு விசிடி போட்டு விற்கிறார்கள். தியேட்டரில் ஒரு டிக்கெட்டின் விலை 120 ரூபாய் என்றால், ஒரு திருட்டு விசிடி 30 ரூபாய்க்கே கிடைக்கிறது பர்மா பஜார், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் சில கடைகளில் விற்பனை செய்திருக்கிறார்கள். 10 தியேட்டர்களை சீஸ் பண்ணியிருக்கிறார்கள்.
இதுமாதிரி செய்வதால், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது குறைகிறது. இப்படி எங்கள் உழைப்பை உறிஞ்சும் திருட்டு விசிடி கும்பலை பிடிக்க போலீசாரும் ஒருபக்கம் செயல்படுகிறார்கள். இருப்பினும், நாளை முதல் நானும் இறங்கி ரெய்டு நடத்தப்போகிறேன். எந்த கடைகளில் திருட்டு விசிடிக்களை பார்த்தாலும் இறங்கி தகராறு செய்யப்போகிறேன்.
மேலும், வெற்றிகள் மட்டுமே இங்கே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தோல்விகளும் கொண்டாடப்பட வேண்டும் என்று பேசிய பார்த்திபன், இந்த வெற்றி எனக்கு பெரிய பயத்தையும் கூடவே ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்.