தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிகே என்ற படத்திற்காக அமீர்கான் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போஸ்டர்கள் பொது இடங்கள் மட்டுமின்றி, நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டதால், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த நீதிபதிகள், சினிமா பொதுமக்களை சந்தோசப்படுத்தும் மீடியா. அதனால் அதில் நீதிமன்றம் அதிகமாக தலையீடு செய்ய முடியாது என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதை பல நடிகர் நடிகைகள் வரவேற்றனர். இது கலைத்துறைக்கு கிடைத்த கெளரவம் என்று ஆளாளுக்கு மகிழ்ச்சியை கொண்டாடி வந்தனர். நடிகை குஷ்புகூட நிர்வாண போஸ்டர் விவகாரத்தில் சினிமாத்துறைக்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கூறியதால் அதை வரவேற்று நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அந்த நிர்வாண போஸ்டரை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் கோர்ட்டில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமீர்கான் உள்பட அப்படத்தில் பங்குபெற்ற 10 பேர் மீதான முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.