ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில் சாருலதா படத்திற்கு பிறகு ப்ரியாமணிக்கு புதிய படங்கள் இல்லை. அதனால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் அம்பரீஷா என்றொரு படத்திலும் நடிக்கிறார் ப்ரியாமணி. இரண்டு ஹீரோயின்களை முன்னிறுத்தி தயாராகும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரட்ஷிதா என்ற கன்னட நடிகையும் நடிக்கிறாராம்.
இந்த ரட்ஷிதா நடித்த சில படங்கள் வெற்றி பெற்றிருப்பதால் அவருக்கு ப்ரியாமணியை விட கன்னடத்தில் மார்க்கெட் அதிகமாக உள்ளதாம். அதனால் இரண்டு ஹீரோயின் கதை என்று சொல்லிவிட்டு, பின்னர் ரட்ஷிதாவுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுத்தவர்கள், ப்ரியாமணி ரோலை இரண்டாம் பட்சமாக்கி விட்டார்களாம். இதன்காரணமாக டென்சனான ப்ரியாமணி அந்த கோபத்தை படப்பிடிப்பில் இருந்த நேரங்களில் ரட்ஷிதாவிடம் காண்பித்திருக்கிறார். இதனால் ஒருநாள் அவர்களுக்கிடையே குடுமி பிடி சண்டையும் நடந்திருக்கிறது. அதையடுத்து, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம் ப்ரியாமணி. இதனால் கன்னட சினிமாவின் பிலிம்சேம்பரில் அவர் மீது புகார் அளித்து மீண்டும் நடிக்க வைத்துள்ளனர்.
அதனால் வேறு வழியில்லாமல் அந்த படத்தில் நடித்துக்கொடுத்த ப்ரியாமணி, சமீபத்தில் அப்படத்தின் ஆடியோ விழா நடந்தபோது அதில் கலந்து கொள்ளவும் மறுத்து விட்டாராம்.