இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்க பரபரப்பாக உருவாகி வரும் படம் 'லிங்கா'. ரஜினிகாந்த் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'கோச்சடையான்' படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாததால், அதை முன்னமே தெரிந்தோ என்னமோ ரஜினிகாந்த் 'லிங்கா' படத்தில் நடிக்க முடிவெடுத்தார். 'கோச்சடையான்' வெளியீட்டுக்கு முன்னதாகவே 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாகி தொடர்ந்து ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்றது. தற்போது கர்நாடகாவில் மீண்டும் நடைபெற்று வருகிறது.
படத்தில் மெயின் வில்லனாக தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர் இதற்கு முன் 'தாண்டவம்' படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் ஈ' புகழ் சுதீப் நடிக்கப் போகிறாராம். சில நிமிடங்களே வரும் காட்சிதான் என்றாலும் அந்தக் காட்சியில் நடிப்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென்பதால் ஒரு முன்னணி நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களாம். அதனால்தான் அதில் சுதீப்பை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதீப் அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.