பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
தமிழில், சூர்யா நடிப்பில் ஹிட்டடித்த சிங்கம், சிங்கம்-2 படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜெய் தேவ்கன் நடிக்க முதலில் சிங்கம் ஹிட்டானது. தொடர்ந்து இப்போது சிங்கம் ரிட்டர்ன்ஸ் படமும் ரீ-மேக் செய்யப்பட்டு அதுவும் ரிலீஸாகி, இப்போது ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மும்பை போலீஸ்க்கு ரோந்து பணிக்காக இரண்டு டாடா கார்களை அஜெய் தேவ்கன் பரிசளித்துள்ளார்.
மும்பையில், மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் முன்னிலையில், இரண்டு டாடா கார்களை அஜெய் தேவ்கன்னும், இயக்குநர் ரோகித் ஷெட்டியும் வழங்கினர். இதில் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, இணை கமிஷனர் ஹிம்மான்சூ ராய், டாடா மோட்டார்ஸ் துணை தலைவர் வி.எஸ்.நோரன்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.