சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
சின்னத்திரையில் வில்லி, போலீஸ், அதிகாரி, காமெடி என்ற சலக ஏரியாவிலும் கலக்கி வருகிறவர் தேவிப்ரியா. வாலி, வல்லமை தாராயோ, கனவே கலையாதே போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க ஆசைப்படும் தேவிப்ரியாவுக்கு வாய்ப்புகள் தான் அமையவில்லை.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: குழந்தை திருமணம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரிக்குதான் முதன் முதலாக கேமரா முன்னாடி நின்றேன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் சினிமாவுக்கு வாங்களேன்னு கூப்பிட்டார். அவர் சிபாரிசுல தான் மின்சார கனவு படத்துல நடிச்சேன். அதுக்கு பிறகு பாதை மாறி சின்னத்திரைக்கு வந்துட்டேன். இடையில் சில படங்களில் நடிச்சாலும் தொடர்ந்து சினிமாவில் சான்ஸ் தேடுற ரூட்டு எனக்குத் தெரியல. வழிகாட்டவும் ஆளில்லை. அதனால சின்னத்திரையிலேயே தங்கிட்டேன்.
சினிமாவில் வில்லி, காமெடி ரோல் ரெண்டுலேயும் சாதிக்கணும்னு ஆசை. நல்ல வாய்ப்புகளுக்காக காத்திட்டிருக்கேன். இப்போது விஞ்ஞானி, கத்துக்குட்டின் இரண்டு படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இந்த படங்கள் ஹிட்டாச்சுன்னா என்னோட சினிமா கேரியர் வேகமெடுக்கும் என்கிறார் தேவிப்ரியா.