டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்னத்திரையில் வில்லி, போலீஸ், அதிகாரி, காமெடி என்ற சலக ஏரியாவிலும் கலக்கி வருகிறவர் தேவிப்ரியா. வாலி, வல்லமை தாராயோ, கனவே கலையாதே போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க ஆசைப்படும் தேவிப்ரியாவுக்கு வாய்ப்புகள் தான் அமையவில்லை.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: குழந்தை திருமணம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரிக்குதான் முதன் முதலாக கேமரா முன்னாடி நின்றேன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் சினிமாவுக்கு வாங்களேன்னு கூப்பிட்டார். அவர் சிபாரிசுல தான் மின்சார கனவு படத்துல நடிச்சேன். அதுக்கு பிறகு பாதை மாறி சின்னத்திரைக்கு வந்துட்டேன். இடையில் சில படங்களில் நடிச்சாலும் தொடர்ந்து சினிமாவில் சான்ஸ் தேடுற ரூட்டு எனக்குத் தெரியல. வழிகாட்டவும் ஆளில்லை. அதனால சின்னத்திரையிலேயே தங்கிட்டேன்.
சினிமாவில் வில்லி, காமெடி ரோல் ரெண்டுலேயும் சாதிக்கணும்னு ஆசை. நல்ல வாய்ப்புகளுக்காக காத்திட்டிருக்கேன். இப்போது விஞ்ஞானி, கத்துக்குட்டின் இரண்டு படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இந்த படங்கள் ஹிட்டாச்சுன்னா என்னோட சினிமா கேரியர் வேகமெடுக்கும் என்கிறார் தேவிப்ரியா.