ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால், அஜீத்தின் பில்லா-2 படம் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்து பிரபலமானவர், இப்போது சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்து கூடுதல் பிரபலமாகிவிட்டார். தமிழ், இந்தி இரண்டு மொழிகளிலும் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வித்யூத், சமீபத்தில் அஞ்சான் படம் புரொமோஷன் தொடர்பாக மலேசியா சென்றார். அவருடன் சூர்யா, லிங்குசாமி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். மலேசியாவில் சிமா தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்போடு, அஞ்சான் புரொமோஷன் நிகழ்ச்சியும் நடந்தது. புரொமோஷன் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு வித்யூத், மலேசியாவிலேயே சில நாட்கள் தங்கிவிட்டார். பிறகு அங்குள்ள ஷாப்பிங் மால், உணவு விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள் என்று தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஜாலி டூர் அடித்துவிட்டு இருதினங்களுக்கு முன்னர் மும்பை திரும்பினார்.
மும்பை திரும்பிய கையோடு, தனது அடுத்தபடம் தொடர்பான வேலைகளில் இறங்கிவிட்டார் வித்யூத். இந்தியில் பிரபல இயக்குநர் திக்மான்சு இயக்கும் புதியபடமான யாரா படத்தில், நடிகர் இர்பான் கான் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வித்யூத். யாரா படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்.