ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
'அஞ்சான்' படத்தில் ஒரு சில நொடிகள் வரும் நீச்சல் உடைக் காட்சியில் சமந்தா நடித்தாலும் நடித்தார், அதைப் பற்றிய பேச்சுதான் அதிகமாக உலவிக் கொண்டிருக்கிறது. இதுவரை தெலுங்கில் கூட எந்தப் படத்திலும் அப்படி நடிக்காதவர் தமிழில் இப்படி நடிக்க என்ன காரணம் என சிலர் திகைத்துப் போயிருக்கிறார்கள். அந்தக் காட்சி பற்றி அதிகப்படியான கமெண்ட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழ் ரசிகர்கள் அந்த காட்சியைப் பற்றி சிலாகித்து எழுதினாலும் தெலுங்கு ரசிகர்கள் சீற்றத்துடன்தான் கமெண்ட் அடித்து வருகிறார்கள். குறிப்பாக மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தாவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து வருகிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு மகேஷ் பாபு, கீர்த்தி சனோன் நடித்த '1 நேநொக்கடைன்' என்ற படம் வெளிவந்தது. அந்தப் படத்திற்காக இடம் பெற்ற விளம்பரங்களில், கடற்கரையில் மகேஷ் பாபுவின் காலடியில் தவழ்ந்தவாறு கீர்த்தி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அதைப் பற்றி சமந்தா, “மிகவும் பிற்போக்குத்தனமான காட்சி” என கமெண்ட் அடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மகேஷ் பாபு ரசிகர்கள் பதிலுக்கு சமந்தாவைப் பற்றி பல்வேறு விதமான கமெண்ட்கள் அடிக்க அப்போது அது ஒரு பெரும் பிரச்சனையானது.
சமீபத்தில்தான் மகேஷ் பாபுவும், சமந்தாவும் ஒரு விருது நிகழ்ச்சியில் அவர்கள் நட்பை மீண்டும் புதுப்பித்ததாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது 'அஞ்சான்' படத்தில் சமந்தா நீச்சல் உடையில் நடித்ததைப் பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் மீண்டும் பொங்கி எழுந்து விட்டனர். கடந்த சில நாட்களாக அவர்கள் சமந்தாவைப் பற்றி மீண்டும் கமெண்ட்களை அள்ளி வீச ஆரம்பித்து விட்டனர்.