டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, தனக்கு பிறகு வந்த எந்த இசையமைப்பாளர்களின் திறமையையும் இதுவரை மனம் திறந்து பாராட்டியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரகுமானைகூட அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கி வந்த பிறகுதான் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தானும் கலந்து கொண்டு பாராட்டி பேசினார்.
அதேசமயம், தனது மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் திறமையைதான் ஆரம்ப கலத்தில் வெகுவாக பாராட்டியிருக்கிறார். அவரைத்தான் பெரிய அளவில் வருவார் என்றும் எதிர்பார்த்தார். மாறாக, அவர் எதிர்பார்க்காத யுவன் ஷங்கர் ராஜா பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட அவர் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், உங்களது இசையில் உருவான பாடல்களில் இளையராஜாவுக்கு பிடித்தமான பாடல்கள் ஏதாவது உள்ளதா? என்று யுவனிடம் கேட்டால், நான் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டேன். சமீபகால எனது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. ஆனால், என் தந்தைக்கு எனது இப்போதைய பாடல்கள் எதுவும் பிடித்ததாக அவர் என்னிடம் சொல்லவில்லை.
ஆனால், தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் என் இசையில் உருவான இது காதலா என்ற பாடலை அந்த சமயத்தில் ஒருநாள் என் தந்தை பாராட்டினார். அதன்பிறகு இன்றுவரை என்னை அவர் பாராட்டியதில்லை. ஆனாலும் அந்த முதல் பாராட்டு இன்று வரை என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது எனகிறார் யுவன்.